02 ஏப்ரல் 2012

கிரிக்கெட் ஒழிப்பார் யாரும் உள்ளனரா???

 வீர மறவ தமிழர் கூட்டம், மறத்தமிழனாகி, பின்பு மரத்தமிழனாகி, இன்று மறதித் தமிழனாகி ஒன்றுக்கும் உதவாத மண்ணாங்கட்டித் தமிழனாகி வருகின்றான்.
அதற்கு கிரிக்கெட்டும் ஒரு காரணம், ஆடுவது சூதாட்டம் தான் என்று தெரிந்தும் பரதேசி பயலுவ பேய் மாதிரி அதும் பின்னாலேயே போவானுங்க. கண்ணை சிமிட்டாம பார்ப்பாணுங்க ... ஒவ்வொரு ஷாட்டுக்கும் உச்சு கொட்டுவானுங்க கையை, டேபிள தட்டி ஆஃபிஸ்ல-வீட்ல-ரோட்ல என எல்லா இடத்திலயும் தொல்லை கொடுப்பானுங்க .... பத்தாவது வகுப்பு எக்ஸாம் டைம் என்று கேஸ் போட்டு தடுப்பார் இல்லை
இந்த நாட்டில் எத்தனையோ பேர் குடிக்க சுத்தமான நீர் இல்லாமலும், பசிக்கு உணவு இல்லாமலும், இருக்க நல்ல இடம் இல்லாமலும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைபடாமல் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அவசியம்தானா?

கருத்துகள் இல்லை: