15 மார்ச் 2012

எனக்கு ஜன்னி வந்து வெட்டி வெட்டி இழுக்குதுப்பா... .. ?!

கடந்த ரெண்டு நாளா ஜெனீவா தீர்மானம்’ மற்றும் சேனல் 4’ ஆவணப்படத்தை வச்சு கருணாவும் அவரின் திமுகவும், கலைஞர் டிவியும், சன் டிவியும் தமிழகத்தில் உண்டு பண்ணும் எழுச்சியை பார்த்து எனக்கு ஜன்னி வந்து வெட்டி வெட்டி இழுக்குதுப்பா... .. இதே வீடியோக்கள் தானே போர் நடந்துக்கிட்டு இருந்தப்போவும் வெளியாச்சு.. .. இப்போ ஆட்சியில இல்லனதும் பொங்குதோ தமிழின உணர்வு.. இத வழக்கம்போல இளிச்சவாயத் தமிழன் நம்பணும்..
 
கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது தமிழ் பழமொழி ...ஆனால் தமிழன் கத்தி எடுத்தால் கத்தியாலேயே சாக கூடாது என்று சிலர் ஒப்பாரி வைப்பதை ஏற்று கொள்ள முடியுமா?
 
பிரபாகரன் அன் கோ தவறான பாதையில் சென்றார்கள்.. இலங்கை அரசு தக்க பதிலடி கொடுத்தது... இப்போது இலங்கையில் அமைதி நிலவுகிறதா இல்லையா?
 
பிரபாகரன் நல்ல விஷயத்துக்காக ஆரம்பித்த இயக்கம் , ஒரு கால கட்டத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதா இல்லையா?
 
ஆனால் அதே சமயம் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்... நம்மவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை பிரச்சினையை எழுப்பி , ஒரு விதமான குரோதத்தை அரசியல் லாபத்துக்காக தமிழகத்தில் உருவாக்கி வருவது மிக பெரிய தப்பாக பிற்காலத்தில் நம் தலையில் வந்து விடிய போகிறது.... இங்கே வாய் கிழிய பேசும் வீர சூரர்கள், இலங்கைக்கு சென்று தனது " தொப்புள் கொடி " உறவுகளுக்கு மறு மலர்ச்சி பனி செய்ய தயாரா?
 
நல்ல மனசுள்ள சாதாரண காங்கிரஸ் காரன் கூட போவான் அந்த பணியினை செய்ய ... ஆனால் இலங்கை தமிழருக்காக வாய்சவடால் விட்டு, அவர்களது நிம்மதியை, மனதை மேலும் மேலும் கெடுக்கும் நம்மூரு புன்னியவாலன்கள் நிச்சயம் இலங்கை தமிழருக்காக 5 பைசா கூட செலவளிக்க மாட்டான்...அவனிடம் இருந்து FUND வாங்கி அரசியல் லாபத்துக்காக இங்கே கூவுவதொடு சரி ஆயிரம் தமிழர்கள் நினைத்தால் இலங்கையில் வீடிழந்த ஒரு தமிழனை வாழ வைத்து விடலாம்... அதற்க்கு நாம் முன் வர வேண்டும்

1 கருத்து:

mani சொன்னது…

காஷ்மீரிலும் கத்திதான் எடுக்கிறார்கள்.ஒட்டுமொத்தமா போட்டுருவமா?உன்னைப்போல் ஒரு சிலரால்தான் ராஷபக்ஸ போன்றவர்கள் உருவாகின்றார்கள்.