14 ஏப்ரல் 2011

ஆட்டைய போடுற ஆளுங்க. நல்லா பாத்துகோங்க


தேர்தல் கமிஷனில் பணியாற்றும் எந்த அலுவலரும், திடீரென வானத்திலிருந்து குதித்தவர்களில்லை; இதே ஊரில், ஏதோ ஒரு துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள்தான். வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிக்க பல அதிகாரிகள் வந்திருந்தாலும், இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் முழு வீச்சில் செயல்பட்டிருக்க முடியாது. அப்படி இருந்தும் யாருக்கும் பயப்படாமல் தேர்தல் பணியாற்றிய இவர்களே, முதல் பாராட்டுக்குரியவர்கள்.இவர்களுக்கு அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் தந்து செயல்பட வைத்ததும், செயல்பட மறுத்தவர்களைத் தண்டித்து, மற்றவர்களுக்குப் பாடம் புகட்டியதும் தேர்தல் கமிஷன்தான். 

தலை சரியாயிருந்தால், எல்லாமே சரியாயிருக்கும் என்பார்கள். அந்த வகையில், எல்லோரையும் சரியாகச் செயல்பட வைத்து, தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார்தான் ஒட்டு மொத்த பாராட்டுக்குரியவர்; அவருக்கு தமிழக மக்கள் அனைவர் சார்பிலும் தலை தாழ்த்தி குரல் உயர்த்திச் சொல்கிறோம்
லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி எல்லாம் உபயோகபடுத்தி உள்ள இருக்கிறதெல்லாம் மாத்திட்டு வெறும் செங்கலை வெச்சிட்டு போனாலும் போயடுவாணுக இவனுக. ஆட்டைய போடுற ஆளுங்க. நல்லா பாத்துகோங்க

ஆட்சி மாற்றம் வேண்டி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள்.. அதை மனதில் வைத்து வரும் காலங்களில் நல்ல ஒரு அரசை கொடுக்க வேண்டும்.. புல்லுருவிகளை தூர வைத்து மக்கள் நலன் மனதில் வைத்து நல்லரசு அமைய இந்த சித்திரை திருநாளாம் தமிழர் புத்தாண்டில் வாழ்த்துகிறேன்

கருத்துகள் இல்லை: