11 ஏப்ரல் 2011

இதைவிடவா ஒரு வெட்கம் கெட்ட செயல் உண்டு?


எல்லா "டிவி' சேனலிலும் பார்த்தீங்கன்னா இப்போ விஜயகாந்த் காமெடி டிராக் ஓடுது. வைகைப்புயல் வடிவேலு கூட இப்போ ஹீரோ ஆயிட்டாரு - அய்யா சமத்துவ புரம் தொறந்து வச்சு, சுடுகாட்டை இடிச்ச ஊரை ஏமாற்றினவரே !
 அது எல்லா சேனல்களிலும் இல்லை,உங்கள் குடும்ப "தொல்லை" காட்சிகளில் மட்டுமே ! ஜெயா ஆட்சிக்கு வந்த கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும் என்று சொன்னவுடன் பல சில்லறை விசயங்களை மக்களிடம் திரும்ப திரும்ப போட்டு,மனதை மாற்ற கடும் முயற்சி எடுத்துவருகிறது!தமிழக மக்களுக்கு உங்கள் "குடும்ப பாசம்" என்னவென்று தெரியாதா என்ன ? உங்களுடய ஐந்து ஆண்டு கால சாதனைகளை (வேதனைகள் தான் மிச்சம்) மக்களுக்கு ஊரு ஊரு போயி எடுத்து சொல்ல "மானாட மயிலாட " குஷ்பு மற்றும் காசுக்காக தன் மேனேஜரையே "தூக்கில் தொங்க" விட்ட வானா.வேணா வும் தான் உங்களுக்கு கிடைத்தார்கள் என்று நினைக்கும் போதே தெரிகிறது - உங்களுடைய "ரேசன் பருப்பு" மக்களிடம் வேக வில்லை என்பது ! அண்ணா பேரை சொல்லி தம்பியிடம் திருடியவர்கள் தானே நீங்கள்…………….
காலில் வீழ்வீர்கள்..! அப்புறமாய் கோடிகோடியாய் விழுங்குவீர்கள்.!! நம்பிய மக்களை சுரண்டி பிழைப்பது தானே உங்களது வளமான வாழ்க்கைக்கு பலமான அஸ்திவாரம். இந்த முறை பொன்முடியோ..வெள்ளிமுடியோ..யாரும் ஜெயிக்கவே முடியாது. முதலில் உங்களது தோல்வியை தடுக்க வழியை தேடுங்கள். உங்களை எதிர்த்து நிற்பவர் படிக்க துடிக்கும் மாணவர்களுக்கு பதவியில் இல்லாமலேயே உதவி வழங்கி நற்பெயர் பெற்றவர். தொகுதி முழுதும் அவருக்கான ஆதரவே உள்ளதாய் வரும் செய்திகள் உமது தோல்வியை உறுதி செய்கின்றன. இலவச ஐ.ஏ.எஸ்..மற்றும் ஐ.பி.எஸ் போன்ற படிப்புகளுக்கான இலவச கல்வி திட்டத்தை உருவாக்கி எண்ணற்ற கல்வியாளர்களை உருவாக்கி சாதனை புரிந்தவரிடம்..உங்களை போன்ற கொள்ளையர்கள் தோல்வி அடைவதுதான் காலத்தின் கட்டாயம். அண்ணா அவர்களும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் பெருமையோடு கட்டிகாத்த ஒரு இயக்கத்தை நீரும் உமது தந்தையும் சேர்ந்து இன்றைக்கு குஷ்புவை காட்டி..காமெடியனை நம்பி இந்த தேர்தலை நடத்துகின்றீர்கள் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் நொந்துபோய் உள்ளதாய் செய்திகள் வருகின்றன. வெட்கம்.. வெட்கம்.. இதைவிடவா ஒரு வெட்கம் கெட்ட செயல் உண்டு? பாவமாய் உள்ளது உங்களது வருங்கால அரசியல் வாழ்வு..! செய்த பாவத்திற்கு தண்டனையை இந்த முறை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும். காலத்தின் கட்டாயம். கொளத்தூரிலே அது ஆரம்பமாகின்றது.! தொடரட்டும்..நாடெங்கும்!!! ! உங்கள் குடும்ப ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் இன்னும் சில தினங்களில் வைக்க போகிறார்கள் "முற்றுபுள்ளி " ! சிந்தித்து செயல் படு தமிழா ! இந்த வாய்பை தவற விட்டால்,இனிமேல் தமிழ்நாட்டை "ஒபாமா" வந்தாலும் காப்பாற்ற முடியாது ! வாக்களிப்பது நமது உரிமை,கடமை ! வாழ்க ஜனநாயகம் !

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சரியான பதிவு..

shiva சொன்னது…

Podaaa Loosaaa

பெயரில்லா சொன்னது…

Intha pathiva padichavathu thirunthungapa.... ivaru solrathu correct.. we have to think..intha 5 years la ennatha antha thaathaa pannitaaru ithuku apram vanthu seiyarthuku... Kudikaran vijayakanth avaru vara koodathu nu solreenga apo 3 , 4 pondaatti vachavaru mattum aatchi la irukalama??

பெயரில்லா சொன்னது…

Intha pathiva padichavathu Thirunthungapa.... 5 years kastapattathu pothum... Think panni parunga Glod and Silver price intha 5 years la jasthiyadichu?? athe madiri rice , parupu, etc ellam price eriduchu... so, maatram thevai....


sinthipeer! seyalpaduveer!