09 ஏப்ரல் 2011

திமுகவை ஏன் தோற்கடிக்க வேண்டும்?


1. மின்துறை அமைச்சரை மின்வெட்டுத்துறை அமைச்சராக மாற்றி அதிக பட்ச மின்வெட்டை அன்றாடம் மக்களுக்கு பரிசாக அளித்ததற்காக....

2. மத்திய ஆட்சியில் அதிக அமைச்சர்களோடு பங்கேற்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மாதந்தோறும் உயர்த்தி காரில் போனவர்களை பைக்கில் போகவைத்து, பைக்கில் போனவர்களை சைக்கிளில் ஏற்றி, பஸில் போனவர்களை பாதசாரிகளாக மாற்றிச் சாதனை புரிந்ததற்காக....

3. வெங்காயம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அள வுக்கு மக்களைக் கதறக் கதற அடித்த கருணைக்காக...

4. தேர்தலில் மட்டும் கூட்டணி அமைக்காமல் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் ஊழலுக்காகவும் ஒரு கூட்டணி அமைத்த ராஜதந்திரத்துக்காக...

5. ராஜராஜ சோழனே... என்று சிலர் பாராட்டியதை சும்மா ஒரு பேச்சுக்காகச் சொன்னதாகக் கருதாமல், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி முறையை அமலுக்குக் கொண்டு வந்த பெருந்தன்மைக்காக...

6. அதிகாரத்தைப் பயன்படுத்தி, தான் மட்டும் சொகுசாகவாழாமல் தன் பெண்டுகள், பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் என அனைவரையும் கோடீஸ்வரர்களாக்கிய பரந்த மனசுக்காக....

7. விவசாயம் செய்யும் விளைநிலங்களின் பரப்பு வேகமாகக் குறைந்து, ரியல் எடேட் தொழிலதிபர்கள் கையில் நிலம் சென்று சேர முழு ஒத்துழைப்பு நல்கியதற்காக...

8. கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, பீடி, பட்டாசு, தீப்பெட்டி, உப்பு, ஜவுளி உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில்கள் அழிய, வெளிநாட்டு முதலாளிகளுக்கு ரத்தினக்கம்பளம் விரித்து, வெண்சாமரம் வீசி வரவேற்கும் கொள்கைக்காக....

9. தனியார் பள்ளி முதலாளிக்கு சலாம் போட்டுச் சமச்சீர் கல்விக்கு வேட்டு வைத்த கல்விக் கொள்கைக்காக, கட்டணக் கொள்ளையர்களோடு வலுவான கூட்டு வைத்துப் பெற்றோர்களை தவிக்க விடும் நல் உள்ளத்துக்காக....
10. பலரும் கோடிகளைக் கொட்டிப் படத்தயாரிப்பு செய்து நஷ்டப்பட வேண்டாமே என்கிற நல்லெண்ணத் தோடு திரைப்படத்துறையில் வேறு யாருமே இருக்க வேண்டாம்; எல்லாமே நாங்க பாத்துக்கறோம் என்று குடும்பமே களத்தில் இறங்கி கலக் கிக் கொண்டிருக்கும் கண்ணியத் துக்காக...•• 

மே 13க்குப் பிறகு தெரியும், மானாடுதா, மயிலாடுதா என்பது. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். கலைஞர் வீடா, தமி்ழ்நாடா என்பதை வாக்களிக்கப் போகும் முன்பு நினைத்துப் பார்த்து முடிவு செய்து கொண்டு வாக்களியுங்கள்

1 கருத்து:

Rahman, UK சொன்னது…

DMK and ADMK both are culprits.