04 ஜூலை 2012

மாட்டு ரவி, ப்ளேடு பக்கிரி, டாக்டர் கலைஞர்

சிறை செல்லும் திமுக தொண்டர்களே, உங்கள் முகங்களை தொலைகாட்சியில் நன்றாக தெரியும்படி காண்பித்து விட்டீர்களா, உங்கள் ((ஒரிஜினல்)) பெயர்களை நன்றாக பதிவு செய்து விட்டீர்களா? மாட்டு ரவி, ப்ளேடு பக்கிரி, டாக்டர் கலைஞர் என்று ஏனோதானோ என்று பதிவு செய்யாமல் கட்சியில் எந்த பெயரில் பதிவு செய்திருக்கிறீர்களோ அந்த பெயரை ரிஜிஸ்டரில் எழுதுங்கள். ஏன் என்றால் அதை வைத்து தான் பின்னாளில் உங்களுக்கு கட்சிக்குள் பதவி காத்து கொண்டிருக்கிறது. அதனால் ஜாக்கிரதை. நன்றாக உங்கள் பெயர் பதிவாகி விட்டதா என்று நிச்சய படுத்தி கொள்ளுங்கள். பாவம் நீங்கள் அந்த பதவி மோகத்தில் தானே அலை கடலென திரண்டு வந்து தானாக வலையில் மாட்டி இருக்கிறீர்கள். ஜெயிலுக்கு செல்கிறீர்கள். உங்கள் கட்சியிடம் ஏமாந்து விட போகிறீர்கள்.


ஹிந்தி போராட்டத்துக்கும், வெள்ளைகாரனை துரத்தவும் சிறை நிரப்புன காலம் போயி திருடர்களை, நாட்டை கொள்ளை அடிக்கிற அரசியல்வாதிகளுக்காக சிறை போராட்டம் செய்து நாட்டையே கேவலபடுதிட்டாறு தமிழின ......... கருணாநிதி ..

இன்று நடந்ததிலிருந்து, இந்தப் போராட்டம் தமிழர்களுக்கோ அல்லது கைது செய்யப்பட்ட மற்ற தி மு க முக்கியப் புள்ளிகளுக்கோ அல்ல... தலைமைக்கான போட்டியில் ஸ்டாலினும் கனியும் மட்டுமே உள்ளார்கள் என்ற உண்மையை நிதர்சனமாகத் தெளிவுப்படுத்துவதற்காக மட்டுமே....

1 கருத்து:

Unknown சொன்னது…

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு. அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு.......................