08 ஜனவரி 2009

இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம்


நமது இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் 1969ம் ஆண்டு சட்டத்தின் 49-O பிரிவின் படி, ஒருவர் வாக்குச் சாவடிக்கு சென்று, தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்திய பின்னர், “தான் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை” என்பதை அங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்து விட்டு, விரல் அடையாள மை பெற்றுக் கொண்டு வரலாம்.


ஆம். இந்த விடயத்தைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் மக்களுக்கு எடுத்துச் செ/சொல்லுங்கள். இந்த வாய்ப்பை பற்றி அரசியல் வியாதிகள் மூடி மறைப்பதாகவே தெரிகிறது.'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்று தெரிவிப்பதால் என்ன பயன்?


ஒரு தொகுதியில் ஒருவர் 500வாக்குகளில் வெற்றி பெறுகிறார் எனக் கொள்வோம். அதே தொகுதியில் இந்த 49-O வாக்குகள் 500 விழுந்திருந்தால் அத்தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப் பட வேண்டுமாம். அது மட்டுமில்லாமல் அப்போது தேர்தலில் நின்றவர்களின் மறுபடியும் அதே தேர்தலில் நிற்க முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களுக்கு எதிராக தங்கள் விருப்பமின்மையை அறிவித்து விட்டனர்.இதன் மூலம் கட்சிகளுக்கு பயம் வரும்.


அதனால் கட்சிகள் பொறுப்பான நல்லவர்களை தேர்நதெடுக்கும். இதன் மூலம் நாம் சாக்கடை அரசியலை மாற்றி நல்ல அரசியலை நாட்டுக்குத் தர முடியும். இது போன்ற ஒரு நல்ல வாய்ப்பு நம் அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதை தேர்தல் கமிஷன் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லையே.


இதன் மூலம் அழுகிய அரசியல் கட்சிகளை அப்புறப் படுத்த முடியும். ஓட்டளிக்காமல் இருப்பதுவும் ஓட்டளிப்பதை விட நல்ல நன்மையை நாட்டுக்குச் செய்திடும். எனவே உங்கள வாய்ப்பை நழுவ விடாதீர்கள். 49-Oவைப் பயன்படுத்துங்கள். 49-Oவைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் சொல்லுங்கள். இதன் சாதக பாதகங்களையும் மேலும் அலசுங்கள்.நமது ஓட்டளிக்கும் உரிமையின் மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்குவோம்.
http://sultangulam.blogspot.com/2008/12/49-o.html"

கருத்துகள் இல்லை: